குளித்தவுடன் காதில் சீழ் வழியுதா?? இதோ இந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள்.. நிரந்தர தீர்வு!!

0
417
#image_title
குளித்தவுடன் காதில் சீழ் வழியுதா?? இதோ இந்த ஒன்றை மட்டும் செய்யுங்கள்.. நிரந்தர தீர்வு!!
காதில் சீழ் வடிதல்  பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் ஒரு நாட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
காதில் இருந்து சீழ் வருவதற்கான காரணம் நாம் தலைக்கு குளிக்கும் பொழுது காதில் தண்ணீர் சென்று விடும். இதை நாம் சரியாக துடைக்காமல் விட்டுவிட்டால் காதில் சீழ் பிடிக்கும். சளி அதிகளவு பிடித்திருந்தால் சீழ் பிடிக்கும். காதில் சீழ் வருவதை குணப்படுத்தாமல் இருந்தால் காது அடைப்பு, காது மந்தமாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். காது கேட்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இந்த சீழ் வடிதல் பிரச்சனையை இயற்கையான முறையித் எவ்வாறு குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருள்கள்…
* நாய்க்கடுகு
* நல்லெண்ணெய்
இதை செய்யும் முறை…
நாய்க்கடுகு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நல்லெண்ணெய் 50 மிலி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய்(வடசட்டி) வைத்து அதில் 50 மிலி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடான பிறகு எடுத்து வைத்துள்ள நாய்க்கடுகை சேர்த்துக் கொள்ள வேண்டும் இந்த கடுகுகள் அனைத்தும் வெடித்த பிறகு அடுப்பை லேசான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை இறக்கி ஆற வைத்து வடிகட்டி வேறு ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். காதில் சீழ் வடிதல் பிரச்சனையை சரி செய்யக்கூடிய மருந்து ரெடி.
இந்த மருந்தை பயன்படுத்தும் முறை…
காதில் சீழ் வடிதல் பிரச்சனை இருக்கும் பொழுது இந்த மருந்தை காலை மாலை என இரண்டு வேலைகளில் பயன்படத்தலாம்.
அதாவது காலையில் ஒரு சொட்டு மாலையில் ஒரு சொட்டு மட்டும் தான் காதில்  விட வேண்டும். அதிகமாக இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. தெடர்ந்து இரண்டு நாட்கள் இந்த மருந்தை பயன்படுத்தினால் காதில் சீழ் வடிதல் பிரச்சனை சரியாகி விடும்.
காதில் சீழ் வடிதல் பிரச்சனைக்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்த மருந்தை காது வலி, காது மந்தம், காது அடைப்பு பிரச்சனைகள் உள்ளவர்களும் இதை பயன்படுத்தலாம். ஒரு சொட்டுக்கு மேல் அதிகமாக இந்த மருந்தை பயன்படுத்தக் கூடாது.