இதெல்லாம் நியாயமா?? லேடி சூப்பர் ஸ்டாரின் அட்டூழியத்தால் புலம்பித் தவிக்கும் தயாரிப்பாளர்கள்!!

0
167
Is this fair?? Producers lament over Lady Superstar's atrocity!!
Is this fair?? Producers lament over Lady Superstar's atrocity!!

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் செயல் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. திருமணம் ஆனாலும் மார்க்கெட் சற்றும் குறையாமல் தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பயங்கரமாக எகிறி உள்ளது.

மக்கள் மத்தியில் இவருக்கு இருக்கு வரவேற்பு மற்றும் சிறந்த கதையை தேர்வு செய்து நடிக்கும் திறன் போன்றவற்றால் இவர் கேட்கும் சம்பளத்தை அள்ளிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக உள்ளனர். இவரது மவுசு பெருகிக்கொண்டே செல்வதற்கு சில முன்னணி ஹீரோக்களும் கூட நயன்தாரா தங்கள் படத்தில் நடித்தால் அது தங்கள் படத்திற்கு கூடுதல் பலம் என கருதுவதும் ஒரு காரணம்.

இவர் கைநீட்டி ஒரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டால் இயக்குனருக்கு எந்தவித தொந்தரவையும் தராமல் கொடுத்த நாளில் தன்னுடைய படைப்பிடிப்பை கச்சிதமாக முடித்துவிட்டு அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆவார். சூட்டிங்கும் சரியான நேரத்தில் வருவார் என்ற நல்ல பெயரும் இவருக்கு உண்டு. எந்தப் பிரச்சனைக்கும் செல்லாமல் தானுண்டு தன் வேலை உண்டு என இருக்கும் நயன்தாரா மீது தற்போது தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.

நயன்தாரா எப்பொழுதும் சம்பள விஷயத்தில் கரார் காட்டுபவர்,  அதுமட்டுமில்லாமல் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதும் இல்லை அதற்கு சம்மதித்தால் மட்டுமே படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வார். இதுபோன்று பொதுவான குற்றச்சாட்டுகள் அவர் மீது உண்டு என்றாலும் தற்போது வந்த குற்றச்சாட்டு ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

அதில் நயன்தாரா தனது மகன்களை பிரிய முடியாமல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு  அவர்களை  அழைத்து வருவதோடு மட்டுமில்லாமல் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆயாக்களுக்கும் தேவையான சம்பளத்தை தயாரிப்பாளர்தான் வழங்க வேண்டும் என நிபந்தனை செய்வதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

அந்த தயாரிப்பாளர் உங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆயாக்களை கூட்டி வந்தால் அவர்களுக்கு நீங்கள் தானே சம்பளம் தர வேண்டும்? தயாரிப்பாளர் ஏன் கொடுக்க வேண்டும்?? என கேள்வியும் கேட்டதாக திரைத்துறை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.