பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

0
106
Is this what a female lawyer does? Wire stretched husband!
Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர்.

திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற பெண்களுடனான தொடர்பினால் மனைவியை விட்டு ஒதுங்கி இருந்ததாகக் கூறப்படுகின்றது. பெண்களின் சகவாசத்தால் பெருமளவு பணத்தை இழந்து கடனில் சிக்கிய ராஜ ஷெரினும் அவனது குடும்பத்தினரும் கடனை சமாளிக்க பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டில் இருந்து மேலும் 100 சவரன் நகைகளையும் சொத்துக்களையும் எழுதி வாங்கி வரச்சொல்லி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பல துன்புறுத்தல்களை செய்ததாக தெரிவிக்கின்றனர்.

தனது குடும்பத்தினர் மனைவிக்கு கொடுத்த துன்புறுத்தல்களை எல்லாம் ராஜஷெரின் கண்டுக்காமல் இருந்ததன் காரணமாக மார்த்தாண்டம் போலீசில் பிரியதர்ஷினி புகார் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக சட்ட ஆலோசகர் அறிவுரையின் பேரில் கோணம் அருகே தனியாக வீடு எடுத்து ராஜ ஷெரினும், பிரியதர்ஷினியும் தனியாக  குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் தான் சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்து உள்ளது எனவும், வேலையில் சேர்ந்த உடன் உன்னை சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன். எனவும் மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற ராஜஷெரின் அதற்கு பின்பு வீட்டிற்கு செல்லவில்லை. தொலைபேசி மூலம் பல முறை கணவனை தொடர்பு கொண்ட போதும் ப்ரிய்தர்ஷினியால் அவருடன் பேச முடியவில்லை.

அதன் காரணமாக சில நாட்கள் தனியாக போதிய உணவின்றி பிரியதர்ஷினி வாழ்ந்து வந்தார். இதனிடையே வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த ராஜஷெரின் சில மணி நேரங்களிலேயே புறப்பட்டு சென்ற நிலையில், கணவனைத் தேடி அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி கணவனைப் பார்த்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு ராஜ ஷெரின் மனசாட்சியே இல்லாமல், தன்  குடும்பத்தினருடன் சேர்ந்து பிரியதர்ஷினியை வெளியே தள்ளி கதவை சாத்திக் பூட்டி விட்டதாக சொல்கிறார்கள்.

அதனால் செய்வதறியாமல் தவித்த பிரியதர்ஷினி கணவன் வீட்டுக்கு முன் நின்று கதறி கதறி அழுதுள்ளார். இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என பூட்டி வைத்திருக்கும் வீட்டின் முன் பிரியதர்ஷினி கதறி அழுதது, காண்போரை கண்கலங்க செய்தது.

பெரிய மழையின் இடையிலும் நடுரோட்டில் உருண்டு புரண்டு கணவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என பிரியதர்ஷினி மன்றாடினார். பிரியதர்ஷனியின் போராட்டத்திற்கு அந்த வீட்டிலிருந்து ஒருவர் கூட செவிசாய்க்கவில்லை. கடைசிவரை வீடு பூட்டிய வீடு பூட்டியே கிடந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து, பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்குள் இருந்த ராஜஷெரின் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி பெண்ணுக்கு நியாயம் கிடைக்க செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.