சமீப காலமாக திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் திமுகவிற்காக களத்திலும், ஊடகங்களிலும் அதிக நேரங்களில் திமுக ஆதரவாக பேட்டி கொடுக்கிறார். திருமா திமுகவின் கூட்டணி என்பதை மறந்துவிட்டு திமுக கட்சிக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார்.
குறிப்பாக TVK கட்சி தலைவர் விஜய் பற்றி பேசுவதென்றால் என்ன விஷயம் என்று தெரியாமலேயே விஜய்யை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்.
பாஜக அதிமுக போன்ற எதிர்கட்சிகளை திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் கூட திருமா அளவிற்கு விமர்சனம் செய்யமாட்டார்கள். திமுகவை பற்றி பேசுபவர்களை திருமா தான் முழு மூச்சாக எதிர்த்து வருகிறார். ஆனால் திமுகவோ திருமா கேட்கும் எந்த கோரிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட்டுகள் தேவை என்று இவர் கேட்ட எதையும் கண்டுகொள்வதில்லை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தரும் திருமாவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. திருமாவை பாராட்டி யாரும் பேசுவதில்லை.
அண்மையில் திருச்சியில் நடந்த மதச்சார்பின்மை காப்போம் என்னும் பேரணியில் திருமாவை வரவேற்க ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ விசிக நிர்வாகிகள் செய்திருந்த ஏற்பாட்டை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். திமுக நினைத்திருந்தால் அந்த நிகழ்வு நடந்திருக்கும். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இவருக்கெல்லாம் இது தேவையா என்பதைப் போல அசால்டாக விட்டுவிட்டனர். திமுக நிர்வாகிகளுக்கே இந்த விஷயம் பிடிக்கவில்லை எனவும், இதனால் தான் இந்த விஷயத்தில் விசிகவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும், இவருக்கெல்லாம் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவணுமா என்று நினைத்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி விசிக நிர்வாகிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.