தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

0
240
#image_title

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக இருக்கும் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

பணியின் பெயர் – இளநிலை மின் பொறியாளர்

கல்வித் தகுதி –

* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

* இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மின் பொறியியல் பட்டயப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு –

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 48 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை –

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேரடியாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விண்ணப்பங்களை கொடுக்கலாம். அல்லது தபால் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை –

நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பள விவரம் –

இளநிலை மின் பொறியாளர் வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு குறைந்தபட்சம் 35900 ரூபாய் வழங்கப்படும். அதே போல அதிகபட்சமாக 113500 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி –

இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி 628215
தொலைபேசி எண் – 0463-9242221

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – பிப்ரவரி 14(14.02.2024)

விண்ணப்பிக்கும் முறைகள் –

* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் முதலில் https://www.tiruchendurmurugan.hrce.in.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வேலை குறித்த முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

* அதன் பின்னர் வேலைக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

* பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் சரியாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர். மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பலாம். அல்லது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நேரில் வந்தும் விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

முக்கிய நிபந்தனைகள் –

* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* தொற்று நோய் உள்ளவர்கள், மனநிலை குன்றிய குறைபாடுகள் உடைய நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடாது.

* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது.