பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

0
98

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர்.

அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது எந்த தோஷம் இருந்தாலும் சரி இதனை செய்தால் போதும் அதிலிருந்து விடுபட்டு விடலாம் என்பது ஐதீகம். பிரதோஷம் நாட்களில் நந்தியம் பெருமானின் நினைத்து உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு நந்திய பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். அத்தோடு நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானின் பிரதோஷ மூர்த்தியாய் தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களிலிருந்தும் இருந்தும் விடு பெறலாம். எந்த தோஷமாக இருந்தாலும் இதனை செய்தால் போதும் அந்த தோஷம் நீங்கிவிடும்.