வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

Photo of author

By Divya

வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

Divya

அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க உயில் உதவியாக இருந்தது.சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எழுதிய உயில் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சொத்து வழங்கப்படும்.சொத்து வழக்கு,வாரிசுப் பிரச்சனை,சொத்துப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உயில் உதவியாக இருக்கிறது.

ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்.பிரச்சனையில் உள்ள சொத்து மற்றும் பூர்விக சொத்தை பிறருக்கு உயில் எழுதி வைக்க முடியாது.முன்பு சாதாரண வெள்ளைத் தாளில் உயில் எழுதி வைக்கப்படும் வழக்கம் இருந்தது.முறையாக உயில் எழுத வெள்ளைத் தாளில் ஸ்டாம்ப் பயன்படுத்தலாம்.பிறகு உயிலுக்கு சாட்சி கையெழுத்து இருவரிடம் வாங்கி பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த உயிலில் கையெழுத்திடுபவர்கள் உயிலுக்கு தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும்.முன்பெல்லாம் கைகளால் உயில் எழுதப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.வெள்ளைத் தாளில் உயில் எழுத வக்கீல் செலவு ஏற்படும்.ஆனால் ஆன்லைனில் உயில் எழுதினால் பணம் மற்றும் நேரம் மிச்சமாகும்.

சிக்கல் இல்லாத சொத்துக்கு உயில் எழுத வக்கீல் உதவி தேவையிருக்காது.ஆன்லைனில் எழுதும் உயிலை அடுத்த 5 ஆண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்.ஆன்லைன் உயிலுக்கும் இரண்டு சாட்சி கையொப்பம் அவசியமாகும்.

நீங்கள் நம்பகத் தன்மை கொண்ட ஆன்லைன் சேவையை கண்டறிந்து உயில் எழுத வேண்டும்.ஆன்லைனில் உயில் எழுதுபவர்கள் தங்கள் முழு பெயர்,பிறந்த தேதி,சரியான விலாசம் ஆகியவற்றை பதவி செய்ய வேண்டும்.

பிறகு login செய்து சொத்து விவரங்கள்,முதலீடுகள் பணம் சம்மந்தப்பட்டவற்றை சரியாக பதிவிட வேண்டும்.இப்படி டிஜிட்டல் முறையில் உயில் எழுதுவது பாதுகாப்பானது மற்றும் பணச்செலவை குறைக்கும் விஷயமாக உள்ளது.