நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

0
73

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது.

 

செவிலியர் பணிக்கு:

பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 14000 உதவித் தொகை மாதம்.

 

சுகாதார செவிலியர் பணிக்கு:

 

ஏ. என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 40 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 11000 உதவித் தொகை மாதம்.

 

தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு:

 

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டயம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு,50 காலி பணியிடங்கள் உள்ளன. ரூ. 9000 உதவித் தொகை மாதம்.

 

கணக்கெடுப்பு பணியாளர் பணிக்கு:

 

பி.எஸ்சி., எம்.எஸ்சி., கணினி அறிவியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு, 50 காலி பணியிடங்கள் உள்ளன.ரூ. 8000 உதவித் தொகை மாதம்.

 

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் நாளை நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறவும்.

author avatar
Kowsalya