சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
75

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற பகுதிகளான தென்காசி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மற்ற மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அதோடு குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.