தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மக்களே உஷார்!

0
68

தமிழ்நாட்டில் இன்றைய தினம் நீலகிரி, கோவை, தர்மபுரி, நாமக்கல் சேலம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களிலும் மற்றும் கன்னியாகுமரி ஒரு சில உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற உதகை கோவை தென்காசி திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

19ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகர் உடைய ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.