ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

0
88

ஆடி மாதத்தின் மகிமை:

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தினை கற்கடக மாதம் எனவும் அழைப்பர். ஒரு மாதத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இவற்றில் தட்சிணாயணம் என்ற புண்ணிய காலம் ஆடிமாதத்தில் தொடங்குகிறது. மேலும், முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது.

ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து பல சூட்சும சக்திகள் வெளிப்படும். மேலும், வேத பாராயணங்கள், ஜெபங்கள், மந்திரங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும், பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடி மாதத்தில் தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் ஆடி கருதப்படுகிறது.

அதனை அடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்த ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையினை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் திருவிழாவும் ஆடி மாதத்திலே நடக்கிறது. மேலும் ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவம் மற்றும் தெய்வீக குணமும் உண்டு.

ஆடி மாதத்தில் எப்போதும் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும்.

ஆடிப்பட்டம் தேடி விதை :

ஆடிப்பட்டம் தேடி விதை என்பது ஒரு பழமொழி. சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெயிலின் தாக்கமானது அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் காற்றுடன் மழையும் பெய்யும். அதன் காரணம் ஆடி மாதத்தில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஒரு விதை என்பது ஒரு துளி விருட்சம் ஆகும். ஒரு பெரிய மரமானாலும் சரி அல்லது ஒரு சிறிய செடியானாலும் சரி அது வளர்வது ஒரு விதைக்குள் தான். விதையானது நல்லமுறையில் முளைத்து வருவதற்கு ஆடி மாதம் சிறந்த ஒன்றாகும்.

ஆடி மாதமானது விதைகளை விதைப்பதற்கு தகுந்த பருவநிலையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடி பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் பிரிக்க முடியாதவை. ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும் என்பதை முன்னோர்கள் கணித்து ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர்.

ஆடியில் விதைத்தால்தான் மழை பொழிந்து பயிர் நன்றாக செழித்து வளரும். அதனை அடுத்து பிராண வாயும், ஜீவ ஆதார சக்தியும் அதிகம் உள்ள மாதமான ஆடி மாதத்தில் விதையை விதைப்பார்கள்.

ஆடியில் விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு பிறெட் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் அவரை விதை, கத்திரி விதை விதைத்து செடிகளை வளர்ப்பார்கள்.

ஆடி மாதம் தொடங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது, வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். மேலும், ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும்.

author avatar
Jayachithra