கடல் உணவு ஏற்றுமதியில் நல்ல லாபம்?

0
232

கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது.நவம்பர் மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி 8.4 சதவீதம் அதிகரித்து 4995 கோடியாக இருக்கிறது.

நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இறால்களின் ஏற்றுமதி பங்கு சராசரியாக 50%அதிகமாக உள்ளது. மேலும் டாலர் மதிப்பு அடிப்படையில் இறால் ஏற்றுமதி பங்கு சராசரியாக 75 சதவீதமாக இருக்கிறது. இறால் மீன்கள் அளவு அடிப்படையில் 26 சதவீதமும் டாலர் அடிப்படையில் 10% பங்குகள் என்று உள்ளன.

கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் . கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டு கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு 3200 கோடி வரையிலும் இருந்தது முந்தைய நிதி ஆண்டில் 2018 ரூபாய் 4607 கோடியாக உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியது.

இந்நிலையில் நவம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 995 கோடிக்கு கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி ஆகியிருக்கிறது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 4 ஆயிரத்து 607 கோடியாக இருந்தது ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ஏறக்குறைய 8.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு உயர்வு கூட இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Previous articleஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?
Next articleகுடியுரிமை சட்ட மசோதா மீண்டும் ரயில் மறியல்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here