கசிந்தது காஷ்மீர் சீக்ரெட்! குறி வைத்து கூறுபோட்ட கூட்டாளிகள்!! கடுப்பில் எதிர்கட்சியினர்!!!

0
224

கசிந்தது காஷ்மீர் சீக்ரெட்! குறி வைத்து கூறுபோட்ட கூட்டாளிகள்!! கடுப்பில் எதிர்கட்சியினர்!!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார். 

பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. 

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரோ ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370ஆவது சட்டப்பிரிவை நீக்குவது குறித்து வெளியிட்டார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக வெளியேறியது. 

அத்துடன் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பின்வாங்கி , அது லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த வெற்றியைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு காஷ்மீரில் நிறுவனங்கள் துவங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் இப்போது அங்கு நிலம் வாங்குவது கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலை துவங்குவது எளிமையாகி உள்ளது என தனது எண்ணத்தை குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி முகேஷ் அம்பானி அங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை துவங்க முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஒரு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராணுவ எந்திர தயாரிப்பில் நண்பனுக்கு வாய்ப்பு அளித்த நிலையில் இந்த அறிவிப்பானது நாட்டு மக்களுக்காக காஷ்மீரா இல்லை நண்பனுக்காகவா என பல்வேறு இடங்களில் கேள்வி எழுந்துள்ளது.

முதலிலே முகேஷ் அம்பானி காஷ்மீரில் கால்பதிப்பதிப்பதுதான் மத்திய அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஅரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு
Next articleமத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் வியூகத்தை விவரித்தார் மோடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here