படப்பிடிப்பில் கமலை கடுப்பேற்றிய கவுண்டமணி – அடுத்து நடந்த அவமானம்!

0
49
#image_title

படப்பிடிப்பில் கமலை கடுப்பேற்றிய கவுண்டமணி – அடுத்து நடந்த அவமானம்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சகலாகலாவல்லவர். இவரை ரசிகர்கள் உலக நாயகன் என்றும், நவரச நாயகன் என்றும் அன்போடு அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை தனக்கென்று ரசிகர்களை வட்டாரத்தை ஏற்படுத்தி கலக்கிக்கொண்டு வருகிறார். கமல்ஹாசன் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களில நடிகர் கமலை, கவுண்டமணி கடுப்பேற்றியதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒருமுறை கமல் ‘சிங்கார வேலன்’ படத்தில் கவுண்டமணி மட்டும் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த ரசிகர்கள் கவுண்டமணியை பார்த்து, செந்தில் சார் எங்கே… நீங்கள் இருவரும் சேர்ந்து நடித்தால்தான் நல்லா இருக்கும் என்று கூறியுள்ளனர். அதற்கு கவுண்டமணி, அட என்னப்பா… இந்தப் படத்தில் ஒரு வெள்ளை செந்தில் இருக்கிறார். அவர்தான் கமலஹாசன் என்று கூறியுள்ளார். இதை அருகில் இருந்த கமல் கேட்டுவிட்டார்.

நம்மை எப்படி இப்படி கிண்டல் செய்யலாம் என்று கமல்ஹாசனுக்கு கோபம் வந்துவிட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறிவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட இளையராஜா நேரா கமல் வீட்டிற்கே சென்று விட்டாராம். இளையராஜாவிடம் கமல், எனக்கு கவுண்டமணி போன் செய்து மன்னிப்பு கேட்டால்தான் நான் படப்பிடிப்புக்கே வருவேன் என்று கூறிவிட்டாராம்.

இந்தச் செய்தி கவுண்டமணிக்கு செல்ல, மன்னிப்புதானே நானே கேட்குறேன். கமலை படப்பிடிப்பு வரச் சொல்லுங்கள் என்று கூறினாராம். மறுநாள் கமல் படப்பிடிப்பு தளத்திற்கு வர, அங்கு 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்களாம்.

படப்பிடிப்புக்கு வந்த கமலிடம், உங்களை நான் வெள்ளை செந்திலுனு சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க என்று திருப்பி, திருப்பி சொன்னாராம். இதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்களாம். அய்யோ… மன்னிப்புதானே சொல்லச்சென்னேன்… இப்படி மானத்தையே வாங்குறாரே என்று நைசா கமல் அங்கிருந்து போய்விட்டாராம்.

author avatar
Gayathri