மனிதர்களுக்கு கனவு வருவது பொதுவான ஒரு விஷயமாகும்.சிலது நல்ல கனவாக இருக்கலாம்.சிலது பயம் ஏற்படுத்தும் கெட்ட கனவாக இருக்கலாம்.ஆனால் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு என்று பலன்கள் இருக்கின்றது.உங்களுக்கு வரும் கனவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் கனவில் இறந்தவர்கள் அழுவது போன்று வந்தால் அது உங்களுக்கு கெட்டது நடப்பதற்கான அறிகுறியாகும்.இந்த கனவு வந்தால் அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்வது நல்லது.
கனவில் ஆலமரம் வந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.அதேபோல் அத்திமரம் கனவில் வந்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
உங்கள் கனவில் கடவுள் தோன்றினால் வாழ்வில் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம்.கனவில் மழை வந்தால் பண வரவு அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் அருவி,குளம் போன்ற நீர்நிலைகள் வந்தால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம்.
கனவில் புலி வந்தால் உங்களுடைய தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் மாம்பழம் வந்தால் உங்கள் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
ஆன்மீக பயணம் மேற்கொள்வது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.கனவில் தாமரை பூ வந்தால் உங்களது பிரச்சனைக்கு முடிவு கிட்டப்போகிறது என்று அர்த்தம்.புல்லாங்குழல் கனவில் வந்தால் மங்களகரமான செயல்கள் நடக்கும் என்று அர்த்தம்.
கனவில் யானை வந்தால் உங்கள் வலிமை அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.நிர்வாணமாக இருப்பது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் கஷ்டம்,அவமானம் வரப் போகிறது என்று அர்த்தம்.திருமணம் நடப்பது போன்ற கனவு வந்தால் வாழ்வில் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.