உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்!

0
81

உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாளை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தங்கள் முதல் ஆசியக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இந்த போட்டி விராட் கோலிக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும்.

மார்ச் மாதம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் (பிசிஏ) ஸ்டேடியத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100வது போட்டியில் விளையாடி மைல்கல் சாதனையை எட்டினார். இந்நிலையில் இப்போது நாளைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் கோஹ்லி டி 20 ஐ கிரிக்கெட்டிலும் அதே மைல்கல்லை அடைய உள்ளார்.

கோஹ்லியின் இந்த சாதனை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும், ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகளை பூர்த்தி செய்யும் மைல்கல்லை எட்டிய உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரராக அவரை மாற்றும்.

ஏற்கனவே நியூசிலாந்தின்  ராஸ் டெய்லர் மட்டுமே உலக கிரிக்கெட்டில் இந்த தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர். சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு (132) பிறகு இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை கோஹ்லி பெறுவார்.