பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

0
40

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாக உள்ளனர். அவர்களுடைய செயலும், சொல்லும் குடும்பம் நடத்தும் முறையும், அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவள் குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

இதில் சில சூட்சுமங்கள் நிரம்பி உள்ளது. எனவே குடும்பத்தில் இந்த பத்து தவறை பெண்கள் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் எச்சரித்து உள்ளன. அப்படி என்ன தவறுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. காலை மாலை விளக்கு வைப்பது நல்லது. அப்படி விளக்கு வைத்த பின்னால் பெண்கள் ஒருபோதும் அழக்கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

2. திருமணமான பெண்கள் கையில் வளையல் இல்லாமல் ஒருவருக்கு உணவு பரிமாறக்கூடாது. அப்படி பரிமாறினால் கையில் காசு தங்காது.

3. அதேபோல் விளக்கு வைக்கும் பொழுதும் கைகளில் வளையல் அணிந்திருக்க வேண்டும். விளக்கு வைத்த பின்னால் ஒருபோதும் வளையலை கழட்டக்கூடாது. இப்போதும் வீட்டில் வளையல் சத்தம் கேட்கும் பொழுது அது பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

4. காய்கறிகளை சாப்பாட்டை எப்போதும் பரிமாறும் போதும் கைகளில் எடுத்துப் போடக்கூடாது. இது தீராத வறுமையை உண்டாக்கும். அன்ன கரண்டியால் பரிமாறினால் தான் நம் வீட்டில் அன்னம் தங்கும்.

5. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் வெளியில் கிளம்பினால் எங்கேயும் தங்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். இதன் காரணமாகத்தான் பிறந்த வீட்டில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது இல்லை. வீட்டில் உள்ள மகாலட்சுமி வெளியேறி விடுவார் என்பது இதன் ஐதீகம்.

6. பெண்கள் ஒரு முறை தலைமுடியை விரித்து விட்டால் அதை மீண்டும் பின்னும் வரை எங்கேயும் அமரக்கூடாது. தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் அமர்ந்தால் அவர் கையில் காசு தங்குவதும் கிடையாது. மகாலட்சுமியின் அனுகிரகமும் கிடைக்காது.

7. சுமங்கலி பெண்கள் மட்டும் இல்லாமல் கன்னிப் பெண்களும் சாந்து பொட்டினை வைத்தால் கையில் பண வரவு அதிகமாகும்.

8. குங்குமப்பொட்டு வைக்கும் பொழுது கன்னிப்பெண்கள் வகிட்டில் வைக்கக் கூடாது. அது மகா பாவத்தை ஏற்படுத்தும்.

9. பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றும் பொழுது எதிர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது. அதாவது முடியாது, கிடையாது, இல்லை, நடக்காது, போன்றவற்றை கூறக்கூடாது.

10. அதேபோல் சில அசுப வார்த்தைகளையும் அமங்கள வார்த்தைகளையும் கூறக்கூடாது. நல்ல நேரம் மட்டும் இல்லை எப்போதும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருந்தால் மகாலட்சுமி அவர்களிடம் நிரந்தரமாக தங்கி விடுவார்.

ஆக இந்த பத்து தவறுகளையும் பெண்கள் செய்யாமல் விட்டால் அவங்க கிட்ட மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி பணவரவு கிடைப்பதற்கான வழியும் உண்டாகும்.