புதியதாக ஆள் சேர்ப்பு.. பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் தமிழக அரசு!! உங்கள் பெயர் உள்ளதா உடனே செக் பண்ணுங்க!!

0
153

புதியதாக ஆள் சேர்ப்பு.. பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் தமிழக அரசு!! உங்கள் பெயர் உள்ளதா உடனே செக் பண்ணுங்க!!

திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குவதாக கூறியது அதன் படி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு இந்த தொகையானது வழங்கப்பட்டது தற்பொழுது மேற்கொண்டு ஒரு லட்சம் பேருக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்துள்ளனர்.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் மற்றும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்களின் மனைவிகள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் என இவர்களுக்கெல்லாம் இந்த உதவி தொகை கிடைப்பதில் வரைமுறை இருந்தது.

தற்பொழுது இந்த உரிமை தொகையானது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அரசு ஊழியர்களின் மனைவிகள் என தொடங்கி பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கும். அதுமட்டுமின்றி வருடம் தோறும் புதிய பயனாளிகள் இதில் இணைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.

தற்பொழுது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என கோட்டை வட்டாரம் கூறுகிறது. மேற்கண்ட புதிய பயனாளிகள் இணைத்து இந்த வருடம் இறுதிக்குள் அவர்களுக்கும் பணம் செலுத்தப்படும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.