ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

0
78

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

 

இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

 

 

சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்ய அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 3/9/2022 பணி நாட்களாக அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படவும் உயிர் சேதம் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் சென்று வர வேண்டும் என கூறியிருந்தார்.

author avatar
Parthipan K