மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!

Photo of author

By Rupa

மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!

Rupa

LOCKDOWN AGAIN!! Corona crossed 4 thousand.. one day after another death!!

Corona: 2019ஆம் ஆண்டு கடந்து கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேற்கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை பாதுகாக்கும் சூழல் உருவானது. பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. நாளடைவில் கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்திய நிலையில் அதன் வீரியம் குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வீரியமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 4026 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதன் வீரியம் குறைவாகத்தான் உள்ளது என சுகாதாரத்துறை ஆதரவு அளித்தாலும் முகக் கவசம் அணியும் படியும் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கும் லேசான காய்ச்சல் இருமல் போன்ற எந்த அறிகுறி இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பும் படி பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினசரி கொரோனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொற்று பாதிப்பு அதிகரித்தால் கட்டாயம் மீண்டும் ஊரடங்கு போடப்படும் எனக் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.