லாக்டவுன் காலகட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பூ பட நடிகை!! 

0
143

தமிழ் சினிமாவிற்கு பூ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி.

பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்த வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால் மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் அவதாரம் எடுப்பதாக செய்தியையும் வெளியிட்டு உள்ளார். இந்த லாக்டோன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, தற்போது ஆசையை  நிறைவேற்றி கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்வதிக்கு மூக்குத்தி குத்திக் கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை ஆகும். அதை இப்போ நிறைவேற்றி கொண்டேன் என்று தான் மூக்குத்தி குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மா குட்டியைப் போல் ஒரு அம்மினிகுட்டி என்று மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Previous articleகுற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி
Next articleகனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்