DMK PMK: அரசியல் வட்டாரத்தில் பாமக குறித்த செய்திதான் தினம்தோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்து வெளியுலகத்தினர் ஆலோசனை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. இதனால் பலரும் திமுகவை கூட புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிட்டனர். திமுகவும் வாரிசு அரசியலை தற்போது வரை முன்னிறுத்தி தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி கருணாநித்திக்கும் அவரது மகன் என்று பல்வேறு அழுத்தங்கள் இருந்தது.
குறிப்பாக கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வரும் பொழுது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரம் பார்த்து ஸ்டாலின் அவரை களம் காண வைத்து பதவி ஒதுக்கினார். அடுத்தபடியாக முட்டுக்கட்டையாக நின்றது அழகிரிதான். கட்சியின் முக்கிய பொறுப்புகள், பதவிகள் என அனைத்தும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மும்மரம் காட்டி வந்தார். அதேபோல கருணாநிதியும் அவருக்கு சட்டமன்றம் செட் ஆகாது என கருதி மத்திய அமைச்சரவையில் பதவி வாங்கி கொடுத்தார். அப்படி இருந்தும் நாளடைவில் அழகிரியை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் கட்சியை விட்டே நீக்கம் செய்தார். அதேபோல உயிர் போகும் நொடி வரை தலைவராகவே கருணாநிதி இருந்தார். யாருக்கும் அந்த பதவியை கொடுக்கவில்லை. இவருக்கு உடல்நிலை சரியில்லாத போது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் என்ற பதவி மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்படி கட்சியை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வைத்து கருணாநிதி எப்படி செதுக்கியுள்ளார் இந்த சாமர்த்தியம் ராமதாஸுக்கு இல்லாமல் போய்விட்டது என கூறுகின்றனர்.
அதேபோல அன்புமணியும் கட்சி பதவி அதன் உரிமை என அனைத்தையும் தனது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அது மிகவும் தவறு எனக் கூறுகின்றனர். கருணாநிதி இறப்பதற்கு முன் தனது வாரிசுகளை நிலை நிறுத்தி கட்சி அங்கீகாரத்தை நிலைநாட்டி சென்றார். ஆனால் தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் விலகி அவரது மகனால் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கட்சியை பின்னடைவுக்கு தான் எடுத்துச் செல்லும். இதைவிட யாரும் இறுதி வரை கருணாநிதியை எதிர்த்து நிற்கவில்லை, ஆனால் பாமகவில் அப்படி கிடையாது. ராமத்தஸ்ஸையே எதிர்க்க துணிந்துவிட்டனர்.