மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..!

0
76
Madurai Adinam Physical Fine! AIADMK's main point participation ...!
Madurai Adinam Physical Fine! AIADMK's main point participation ...!

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..!

சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது.

மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். திருஞானசம்பந்தரை அடுத்து இன்றுவரை பீடாதிபதியாக 292 பேர் இருந்து வந்துள்ளனர், 292இரண்டாவதாக அருணகிரி இருந்தார்.

அவருக்கு அடுத்து 293வது ஆக நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் அருணகிரி 5 கோடி நித்யானந்தாவிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு இப்பதவியை தந்ததாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.அதே வேளையில் காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடத்தை சேர்ந்தவர்கள் நித்யானந்தா நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பல்வேறு போராட்டங்களும் நடந்தது.அதனையடுத்து இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்த போவதாக தகவல்கள் வெளிவந்தது.இந்த தகவல்கள் வெளிவந்த நிலையில் நித்தியானந்தாவை பொறுப்பில் இருந்து நீக்கினார்.மீண்டும் மதுரை ஆதினம் அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளே மதுரை திருமடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தற்பொழுது இவருக்கு 77 வயதாகி உள்ளது.கடந்த இரு தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இரு நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இவர் உட்கார்ந்து ஆசி வழங்குவதை போலவே இவரது உடல் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரின் முன்னிலையிலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

மேலும் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் திரளாக கூடி இவரது இறுதி சடங்கில் கலந்துக்கொண்டனர்.இவரது உடல் இறுதியாக மாசி வீதியில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலம் கொண்டுவரப்பட்டது.அதனையடுத்து ஆதினத்திற்கு சொந்தமான முனிச்சாலை பகுதியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.இவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் மாசிலாமணி சுவாமி ஆதினம் தலைமயில் நடைபெற்றது.மீதமுள்ள ஆதினர்களும் கலந்துகொண்டனர்.இவரது உடலை உட்கார்ந்த படியே அடக்கம் செய்தனர்.