மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

0
205

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

வருகிற மார்ச் 7ம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக அயோதி செல்ல இருக்கிறார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது .

வருகிற மார்ச் 7ம்தேதி உத்தவ் தாக்கரே ராமர் கோவிலில் வழிபாடு செய்ய இருக்கிறார். அன்று மாலை சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து புதிய முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு முதல் முறையாக வரும் ஏழாம் தேதி அயோத்திக்கு பயணம் செய்கிறார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே பாஜக மூத்த தலைவரான அத்வானி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியையும் சந்தித்து உள்ளார்.

Previous articleதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!
Next articleஇட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலை! மத்திய அரசின் துரோகத்திற்கு ஆதாரம் இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here