மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

Photo of author

By Parthipan K

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

Parthipan K

Updated on:

மகேஷ் பாபு சம்பளம் வாங்கும் விதம்! தமிழ் ஹிரோக்களும் பின்பற்றலாமே?

தயாரிப்பாளர்களின் மேல் அதிக சுமை வைக்காமல் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய படங்களின் சம்பளத்தை வித்தியாசமான முறையில் பெற்றுக்கொண்டு வருகிறார்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ரசிகர்களின் வெறியும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதும் தான் என சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் ஏற்றத்துக்குக் காரணம் கட்டுக்கடங்காமல் செல்லும் நடிகர்களின் சம்பளம்தான்.

அதனால் படங்கள் நஷ்டமடையும் போது நடிகர்களின் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டம் நடத்தும் அளவுக்கு செல்கிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் சம்பளமாக நடிகர்கள் பெறுவதால் தயாரிப்பாளர்கள் மிகப்பெரும் கடன்சுமைக்கும் ஆளாகின்றனர். இதை மாற்றும் விதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு வித்தியாசமான முறையில் சம்பளம் பெற்றுக்கொள்கிறார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா மற்றும் விஜயசாந்தி ஆகியோரின் நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து சரிலேறு நீக்கவேரு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக மகேஷ் எந்த வொரு சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மூன்றாவது தயாரிப்பாளர் என்ற முறையில் பெற்றுக்கொண்டுள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கு பணச்சுமை ஏற்படாமல் படத்தை திட்டமிட்ட செலவில் தயாரித்துள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அதே போல மகேஷ் பாபுவுக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது

தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் படி மகேஷ் பாபுவின் தற்போதைய சம்பளம் 30 கோடி ரூபாய். சரிலேரு நீக்கவேரு படத்தில் அவர் வாங்கிய உரிமைகளை விற்றதன் மூலம் 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வழக்கமான அவரது சம்பளத்தை விட 250 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த முறையால் அதிக வருவாய் வருவதால் இனி வரும் படங்களில் எல்லாம் இதே முறையில் உரிமைகளை வாங்கிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப் போன்ற முறையை தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் பின்பற்றினால் அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்கும் என திரை வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.