மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் மம்மூட்டி அவர்களுக்கு தற்பொழுது 70 வயதாகிறது. இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவி ரசிகர்களை வருத்தமடைய செய்திருந்தது. ஆனால் ஒரு சிலரும் நோன்பு காலத்தில் அவருடைய முதுமை காரணமாக சோர்வாக இருக்கிறார் என்றும் இவருக்கு புற்று நோய் கிடையாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பரான மோகன்லால் அவர்கள் சபரிமலை சாஸ்தா கோவிலில் மம்முட்டியுடன் நலம் தீர வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தி வந்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் மம்முட்டி அவர்களுக்கு குணமடைய வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் தீவிரமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் மம்முட்டி இன்றுவரையும் மலையாளத்துறையுள்ளாக்கில் ஹீரோவாகவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலத்தில் இருக்கக்கூடிய பனம்பில்லி என்ற இடத்தில் மம்முட்டி அவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது இந்த வீட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நடிகர் மம்முட்டி அவர்கள் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அதன்பின்பு, அம்பேலி பாதம் என்ற இடத்தில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பனம்பில்லியில் உள்ள தன்னுடைய வீட்டை தங்கும் விடுதியாக மற்ற முடிவு செய்து வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அதற்கான முன்பதிவு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்முட்டி அவர்களின் பனம்பல்லி வீட்டில் நான்கு படுக்கையறை இருப்பதாகவும் ஹோம் தியேட்டர் வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய ரசிகர்கள் இவருடைய வீட்டில் தங்க நினைத்தால் அதற்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வெயிட்டானது தங்கக்கூடிய நபர் ஒருவருக்கு ரூ.75,000 வரை வசூலிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.