பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்!

0
165

பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கமலின் ‘விக்ரம்’ படத்தை உதாரணம் சொல்லி பதிலளித்த மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இரு பாகங்களாக உருவாகியுள்ள படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் படக்குழு ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு திரையரங்கில் பார்க்கலாம். மேலும் படத்தின் ஓடுநீளம் 2 மணிநேரம் 47 நிமிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக 2.30 மணிக்கு மேல் இருக்கும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் பல கதாபாத்திரங்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த நீளம் நியாயமானதுதான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் படத்தின் நீளம் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர்  இயக்குனர் மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியபோது “விக்ரம் படத்தின் நீளம் இதைவிட அதிகம். அந்த படம் சிறப்பாக ஓடவில்லையா?” என நச்சென்று பதிலளித்துள்ளார்.