மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

0
33

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

 

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு 11 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்து சென்றனர். மேலும் அந்த பெண்களை பாலியல் வன் கொடுமை செய்தனர். அது மட்டுமில்லாமல் கூட்டு பலாத்காரமும் செய்தனர்.

 

இதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபலங்கள் பலரும் கண்டனங்களை  தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை நாங்போக் செக்மாய் பகுதியை சேர்ந்த காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நேற்று அதாவது ஜூலை 21ம் தேதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் 11 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.