கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய முடிவு !!

0
159

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா கடற்பகுதியில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள டால்மியா கடற்கரை பகுதியில், கடந்த சில நாட்களாக 500 நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கி வருகின்றனர்.அவற்றினை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் மூலம் மீட்பதும், கடலுக்குக் கொண்டு சென்று விடுவதும் ,தண்ணீரை மேல் ஊற்றி ஈரப்பதத்துடன் வைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சுமார் 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் 380 திமிங்கலங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 70 திமிங்கலங்கள் மட்டுமே கடலில் விடப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள திமிங்கலங்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றை கருணை கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 380 திட்டங்களை கடற்கரையிலேயே புதைக்க ஆஸ்திரிய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Previous articleஎஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!
Next articleஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்