சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி! மகிழ்ச்சியில் மக்கள்!

0
166

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 22651 கெடுக்கும் அது பிணியைத் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 95 ஆயிரத்து 402 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 463 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 26 ஆயிரத்து 328 அதிகரித்திருக்கிறது. 33 ஆயிரத்து 646 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1900036 ஆக அதிகரித்து இருக்கிறது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் நேற்று ஒரே நாளில் 1971 பேர் இந்த நோய்த் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 729 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவமனைகளில் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.68 லட்சமாக இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2810 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அதோடு ஒரு வாரங்களில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் பரிசோதனைகள் அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 60 ஆயிரமாக இருந்தது. தற்சமயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 37 நாட்களில் 19 மாவட்டங்களில் நோய்தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வுகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீதம் உள்ள மாவட்டங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous article450 படங்களில் நடித்த அற்புத நடிகர்! கொண்டாடிய பிறந்தநாள்!
Next articleடெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here