ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! ஹெல்த்கேர் துறையில் அதிரடியாக இறங்கிய அம்பானி!

0
191

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன்னுடைய வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பெரிதுபடுத்தி இருக்கும் நிலையில் இன்றைய தினம் மிகப்பெரிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனத்தில் ஒன்றுதான் ஜீனோம் டெஸ்டிங் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் பங்குகளை கைப்பற்றி தன்னுடைய ரிலையன்ஸ் குடைக்குள் சேர்த்து இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பித்து ரீடைல் ஹெல்த் கேர் டிஜிட்டல் மருத்துவம் என்று பல துறையில் தொடர்ச்சியாக வர்த்தகத்தை விரிவு செய்து வருவது எல்லோருக்கும் தெரியும் இந்த நிலையில் தற்சமயம் முகேஷ் அம்பானி ஹெல்த்கேர் பிரிவில் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

ஆகவே ரிலையன்ஸ் டிஜிட்டல் செல் திட்டங்களின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பஸ்னஸ் பிரின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக சுவனம் டெஸ்டிங் நிறுவனமான கிரான்ட் லைஃப் சயன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மிகப்பெரிய பகுதி பங்குகளை கைப்பற்றி இருக்கிறது என்று பங்குச்சந்தையில் சமர்ப்பித்து இருக்கின்ற அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

ரிலையன்ஸ் குழுமம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்திருக்கிறார் அறிக்கையில் ரிலையன்ஸ் பிராஜக்ட் பிசினஸ் வென்சர்ஸ் லிமிடெட் மூலமாக ஸ்டாண்டர்ட் சயின்ஸ் நிறுவனத்தின் 2.25 கோடி பங்குகளை பத்து ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 393 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது என சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சுமார் 80.3 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், பங்கு கைப்பற்றிய பின்னர் ரிலையன்ஸ் நிர்வாகம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சுமார் 160 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது.

கடந்த 2000 அக்டோபர் 6ஆம் தேதி முதல் இயங்கி வரும் ஸ்டாண்ட் லைஃப் சயன்ஸ் இந்தியாவில் ஜூனம் டெஸ்டிங் பிரிவில் முன்னோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்திடம் பயோ இன்பர்மேட்டிக்ஸ் மென்பொருள் மற்றும் மருத்துவமனை முதல் பார்மா நிறுவனங்கள் வரையில் அனைத்து மருத்துவ பிரிவினருக்கு மான கிளினிக்கல் ரிசர்ச் சேவைகளை அளித்து வருகின்றது.

2021 ஆம் நிதியாண்டு முடிவில் சாந்த் லைஃப் சயின்ஸ் நிறுவனம் எண்பத்தி எட்டு புள்ளி 70 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று 8.45 ஒரு ரூபாய் அளவிலான லாபத்தை பெற்று இருக்கிறது. இதற்கு முந்தைய வருடத்தில் சுமார் 25.04 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உலக தரம் வாய்ந்த ஹெல்த்கேர் ஈகோ சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மேம்பட்ட ஹெல்த்கேர் சேவையை வழங்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிரிவின் ஹெல்த்கேர் பிரிவு இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹெல்த்கேர் கனவை நனவாக்குவதற்கு ஸ்டாண்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கைப்பற்றல் மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் நோய் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது. இந்த மருந்தை சோதனை செய்ய கோரிக்கை விடுத்த நிலையில், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் முதற்கட்ட சோதனை க்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது..

Previous articleதங்கத்தின் விலை உயர்வும்! அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டமும்!
Next articleஅரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here