பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
125
Myna movie heroine sitting in the morgue and eating! Shocked fans!
Myna movie heroine sitting in the morgue and eating! Shocked fans!

பிணவறையில் உட்கார்ந்து சாப்பிடும் மைனா பட கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அமலாபால் முதலில் தமிழ் திரை உலகின் சிந்து சமவெளியில் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிறகு மைனா மூலம் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை அடுத்து தான் ஒரு நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மைனா படத்திற்கு பிறகு இவரது படம் அந்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மீண்டும் ஓர் கம் பாக் ஆக  தெய்வத்திருமகள் படத்தில் பேராசிரியராக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் சார்மிங் ஆக்டர் ஆக இடம்பிடித்தார். அதனை அடுத்து தெய்வத்திருமகள் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் உடன் காதல் வயப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து இவர்களுக்கிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவகாரத்தை அடுத்து மீண்டும் படத்தில் நடிக்கத் தொடங்கினார். சமீபகாலத்தில் அமலாபால் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை போட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வாறு போடும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் கையில் மதுபானம் உடன் ஓர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அது இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. பல நாட்களாக கழித்த தற்பொழுது காடவர் என்ற படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/CVfIWW6PCBx/?utm_source=ig_web_copy_link

இப்படம் பெண்ணை சார்ந்த எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனூப் பணிகர் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் அமலாபால் தடையை அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார்.மேலும் இப்படம் டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட போர் போலீஸ் சர்ஜுனோடே என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அமலாபால் பிணவறையில் உட்கார்ந்துகொண்டு உணவு உண்பது போல் காண்பித்துள்ளனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கில் உள்ளதால் மக்கள் அப்படத்தை பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் அமலாபால் என்பது குறிபிடத்தக்கது.