கூட்டணி சிக்கலை பொதுவெளியில் போட்டுடைத்த நயினார்! பாயிண்டை பிடித்த திருமாவளவன் 

Photo of author

By Anand

கூட்டணி சிக்கலை பொதுவெளியில் போட்டுடைத்த நயினார்! பாயிண்டை பிடித்த திருமாவளவன் 

Anand

Nainar put the alliance problem in the public space! Thirumavalavan took the point

முன்னதாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவாகியிருந்தாலும், இரு கட்சிகளும் மனமுழுதாக ஒருமித்த நிலைமைக்கு வரவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதை அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று உள்ளன.

மறுபுறம், பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதாகவும், கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாகவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்த நிலையில் அதை தொடர்ந்து மறுத்திருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச்சில் திடீரென டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததைக் கொண்டே அதிமுக – பாஜக கூட்டணி April 11 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு தேமுதிக, பாமக போன்ற கட்சிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக போன்ற கட்சிகளுக்கும் பாஜகவின் கூட்டணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த கூட்டணியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் “மிரட்டலால் உருவான கூட்டணி” என்று விமர்சித்துள்ளன. ஆனால், “திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என்ற குறைந்தபட்ச ஒப்பந்தத்தின்படி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என அதற்கு எடப்பாடி விளக்கம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், திருச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக எதிரணி வலுவாக உள்ளதாகவே நயினார் நாகேந்திரனும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், திமுகவை எதிர்கொள்ள முரண்பாடுகளை மறந்து விருப்பமுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு குழுவாக சேர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதிலிருந்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்தம் இல்லாதது தெளிவாகிறது” என்றார்.

மேலும், “அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததாகச் சொன்னாலும், அதற்குள் உண்மையான பிணைப்பு ஏற்படவில்லை. அமித்ஷா மற்றும் எடப்பாடி சந்திப்புக்குப் பிறகும், இரு கட்சிகள் ஒரே மனதுடன் செயல்படவில்லை. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதும், அதனை மறுத்த எடப்பாடியின் பின்விளக்கமும் இதற்கு சாட்சி” என அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நேரத்தில், “தமிழ் என்பது திராவிட மொழிகளின் மூலமொழி” எனும் கருத்தைப் பற்றி எழுந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தேவநேய பாவானர் போன்ற மொழியியல் நிபுணர்கள் தமிழ் மொழியின் பாரம்பரியம் குறித்து தெளிவாகக் கூறியுள்ளனர். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழின் வழியாகவே உருவானவை என்பதே வரலாற்று உண்மை” என்றார்.