ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

Photo of author

By CineDesk

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

CineDesk

Updated on:

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா என்ற பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் நடத்திய நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் தற்போடு பிளாக் ஃப்ரைடே சேலஸ் நடைபெற்று வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள தோல் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் தோலாடை உடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 பேர்கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இதில் இளம்பெண்களும் நிர்வாணமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல் ஆடைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்படுவதாகவும் இந்த ஆடையை தடை செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது

ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் தோல் உற்பத்தி ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டிலும் தோல் ஆடைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆடையின்றி இவர்கள் போராடியது அந்நாட்டின் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது