Cinema: சினிமா துறையில் சமீப காலமாக பல நட்சத்திரங்கள் விவாகரத்து பெற்று வருகின்றனர். முதலில் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிக்கு ஆரம்பித்து இறுதியில் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் சைந்தவி, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோரும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் மலையாளம் என கலக்கி வந்த நடிகையான நஸ்ரியா இன்ஸ்ட்டாவில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அது குறித்து தான் பலரும் பேசி வருகின்றனர். இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய குழந்தையும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகத்திற்கு தெரியும். ஆனால் இவர் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் நஸ்ரியா பகத் பாசிலை பிரிய போவதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் அவர் கூறியதாவது, எனது நண்பர்கள், என் உடன் பணிபுரிந்தவர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டனர். ஆனால் யாருடைய தொடர்பையும் ஏற்கும் நிலையில் நான் இல்லை. கடந்த சில மாதங்களாக உணர்வு ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். இதனால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியவில்லை. எனது உணர்வு ரீதியான பிரச்சனையால் எனது பிறந்தநாள், புத்தாண்டு, தான் நடித்து வெற்றி பெற்ற படமான சூட்சமதர்ஷினி உள்ளிட்டவைகளில் பங்கு கொள்ள முடியவில்லை.
இதிலெல்லாம் பங்கு கொள்ளாததற்காகத் தான் தற்போது மன்னிப்பு கேட்கிறேன். மேற்கொண்டு எனக்கு சிறந்த நடிகைக்கான கேரளா திரை விமர்சகர்கள் விருதைப் பெற்றுள்ளேன். எனக்கு கொடுத்த இந்த விருதுக்கும் மிகவும் நன்றி. எனது மனத ரீதியான பிரச்சனையில் கடந்து வர முயற்சிக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேற்கொண்டு நான் பழைய நிலைமைக்கு வர சில காலம் ஆகும் என தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியிருப்பதற்கு இவர்கள் திருமண வாழ்க்கை முடிவு பெற போகிறது, அதனால்தான் இவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.