ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்த கான்ஸ்டபிளின் மனைவி. தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பத்ராச்சலம் என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுபாஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் சுபாஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி … Read more

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர்.  வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்” என்னும் தகவலை  பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்ன செய்தி என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. அத்துடன் பிரதமர் மோடி தனது உரையாற்றலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 49,790 பேருக்கு பாதிப்பு! அக். 20 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 49,790 பேருக்கு பாதிப்பு! அக். 20 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 49,790 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,97,063 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 587 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,15,197 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,720 … Read more

அதானி குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதானி குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கவும் அதை குத்தகைக்கு எடுக்கவும் ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது ஏலத்தில் அதானி குழுமத்திற்கு குத்தகை கிடைத்துள்ளது.  திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகையை அதானி குழும நிறுவனம் எடுப்பதாக ஒப்பந்தம் பதிவாகியுள்ளது. ஆனால் அதே குத்தகை எடுக்கும் ஏலத்தில் கேரள அரசும் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது அதானி குழுமத்திற்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து கேரள அரசு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கேரள உயர்நீதிமன்றம் அதானி குழுமத்திற்க்கு எதிரான … Read more

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாய் கடந்த சில மாதங்களாகவே அனைத்து துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எதிர்த்து போராடி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவின் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சில … Read more

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் – யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் - யாருக்கு தெரியுமா?

மைசூர் பல்கலைக்கழகம் தனது நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே நேரில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பிற மாணவர்களும், பெற்றோர்களும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த இதர உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சி கர்நாடக ஆளுநர் தலைமையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியை … Read more

ஆதார் ஆணையம் கைவிரிப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

ஆதார் ஆணையம் கைவிரிப்பு - சிபிசிஐடி விசாரணைக்கு பின்னடைவா?

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் மோசடி ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அதில் 2 மாணவிகள் உள்பட 10 பேர் மீது ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிசிஐடி இந்த 10 மாணவ – மாணவிகளின் புகைப்படங்களை பெங்களூரிலுள்ள ஆதார் ஆணையத்தில் கொடுத்து, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி எடுத்துள்ளது.  … Read more

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் வருகை!

பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் வருகை!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த எண்ணிக்கையில், அதாவது 50 சதவீத எண்ணிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.  மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  பெற்றோரின் … Read more

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வேலியே பயிரை மேயலாமா ? காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் !!

மத்திய பிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் காவல் நிலையத்திக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த பாலியல் கொடுமை கொடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்ந்து … Read more