Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!

Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? அது தீர்ந்த சமயம் சுவாசிப்பதற்கு சிரமப்படுகிறார்களா? இந்த மூலிகை நீரைக் குடியுங்கள் உங்கள் சுவாசம் சமநிலைப்படும்.

பொதுவாக ஆஸ்துமா,சைனஸ்,டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள்.இந்த பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது.இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகும் போது ஈசியாக சுவாசிப்பதற்கு இன்ஹேலரை -யை (Inhaler) பயன்படுத்த சொல்வார்கள்.

இது சில சமயம் தீர்ந்துவிடின் இந்த பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிப்பதற்கு பெரிதும் சிரமப்படுவார்கள்.இந்த சமயத்தில் இந்த மூலிகை நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

அது எவ்வாறு செய்வது என்பதை கீழே பார்ப்போம்.

Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!

கற்பூரவள்ளி இலை 6, இஞ்சி சிறிதளவு, கருந்துளசி இலை சிறிதளவு இது மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டம்ளர் வரும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த நீரின் நிறம் பச்சை நிறமாக மாறும்.

இதனை தேனீர் சூடாக குடித்தால் அரைமணி நேரத்தில் சுவாசம் சமநிலை ஆக்கப் படும்.இதே மூலிகை நிரையும் சுவாச பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகையில் முற்றிலுமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.