ராமநாதபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா!

0
117

நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால் இந்த பண்டிகைக்கு இடத்திற்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என்று பெயர்கள் மாறுபடும். அடிப்படை என்பது அம்மன் வழிபாடு தான்.

ஸ்ரீ ராமர் ராவணனை போரில் வெற்றி பெற்றதை போற்றும் விதமாக தசரா விழாவை வட மாநில மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயதசமி நாளில் மைசூர் வின் சாமுண்டீஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள்.

தசராவின் போது கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக இருக்கும்.

இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூர் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமி அன்று தசரா ஊர்வலம் நடைபெறும்.

தங்கமண்டபத்தில் சாமுண்டீஸ்வரி தேவி எழுந்தருளி மைசூர் நகரின் பிரதான வீதிகளில் வளம் வருவார் துர்க்கை மகிசாசுரனை அழித்த நாளே இது விஜயதசமி வடக்கே உள்ள ஐதீகம்.

பராசக்தியை துர்க்கை வடிவம் தசராவில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவார்கள்.

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆச்வின மாதம். இந்த மாதத்தில் இருக்கின்ற வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையில் இருக்கின்ற நாட்களே நவராத்திரி.

ராமநாத புறத்திலும் கர்நாடக மாநிலத்தில் கொண்டாடுவதைப் போல ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெறும்.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்சவம் மூர்த்திகளுடன் ஊர்வலமாக மஹர் நோன்பு திடலை அடைந்து அங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவார்கள்.