ஆக்சன் ராணியாக வந்த நயன்தாரா!! இனி எச்சரிக்கை உடன் இருக்குமாறு விக்னேஷ்-க்கு அறிவுரை கூறிய ஷாருக்கான்!!

0
27
Nayanthara came as the queen of action!! Shah Rukh Khan advises Vignesh to be careful from now on!!
Nayanthara came as the queen of action!! Shah Rukh Khan advises Vignesh to be careful from now on!!

ஆக்சன் ராணியாக வந்த நயன்தாரா!! இனி எச்சரிக்கை உடன் இருக்குமாறு விக்னேஷ்-க்கு அறிவுரை கூறிய  ஷாருக்கான்!!

நயன்தார தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான் . இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.

நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலக்கட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார்.

காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு  ஹீரோக்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபாத்திரத்திற்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நயன்தாரா  தேர்ந்தேடுக்கும் அனைத்து படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்த பின்பே அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்.

தற்பொழுது நயன்தாரா  நடிக்கும் புதிய படம் ஜாவான். அந்த படத்தில் ஷாருக்கான் மற்றும்  விஜய் சேதுபதி என்ற இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் தீபிகா படுகோன் ,சஞ்சாய் தத் போன்றவர்களும் இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படம் தமிழ் ,இந்தி ,தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது படம் செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இதனை எப்பொழுது தியேட்டரில் காண போகின்றோம் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

 இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்த விக்னேஷ் சிவன் ஷாருக்கான் அவரை மிகவும் நன்றாக உள்ளது என்று பாராட்டி உள்ளார்.அதற்கு ஷாருக்கான் கதாநாயகியான நயன்தாரா  மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்றும் இந்த படத்தில் அவர் ஆக்சன் ராணியாக நடித்து உள்ளார் அதனால் கொஞ்சம் ஜாக்கிரதை என்று கூறினார்.

author avatar
Parthipan K