அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!

Photo of author

By CineDesk

 அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!

CineDesk

Nayanthara's tattoo at that place! Controversy caused by the photo published by the husband!

 அந்த இடத்தில் நயன்தாரா போட்ட டாட்டூ! கணவர் வெளியிட்ட போட்டோவால் உருவான சர்ச்சை!

செஸ் ஒலிம்பியா  போட்டியானது முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேரு ஒரு விளையாட்டு அரங்கில் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடங்கினர். இந்த விழாவின் ஆரம்ப விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த தொடக்க விழா அனைவரையும் கவரும்  வகையில் பிரம்மாண்டமாக இருந்ததையடுத்து பலர் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் திருமண முடிந்த கையோடு தொடர்ச்சியாக வேலையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு உண்டான நேரத்தை செலவிட முடியவில்லை.

அதனால் எங்களுக்கு உண்டான நேரத்தை செலவிட ஸ்பெயின் க்கு செல்வதாக விக்னேஷ் தனது இன்ஸ்டா வில் கூறினார். அங்கு சென்று அங்குள்ள பல இடங்களை சுற்றி பார்த்து வருகின்றனர். தினந்தோறும் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் புகைப்படம் அவர்களின் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் அப்லோட் செய்து வருகிறார். தனது தங்கம், எனது உயிர் என தினந்தோறும் வர்ணித்த வண்ணமாகவே தான் விக்னேஷ் சிவன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று கழுத்தின் பின்புறம் டாட்டூ  உள்ளது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது எப்ப போட்ட டாட்டூ என்று கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இந்த டாட்டூ விக்னேஷ் சிவனுக்காக போடப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக பிரபுதேவாவை காதல் செய்து வந்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சை குத்தி இருந்தார். நாளடைவில் இருவரும் பிறந்த நிலையில் அதனை பாசிட்டிவிட்டி என்று மாற்றிக் கொண்டார். தற்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது பெயரை டாட்டூ போட்டுள்ளாரா என்று ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.ஆனால் இந்த கழுத்தின் பின்புறம் உள்ள டாட்டூ பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாக கூறியுள்ளனர்.