திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்!

0
80
Nayanthara's wedding to be held in Tirupati Pre-arranged booking clicks!
Nayanthara's wedding to be held in Tirupati Pre-arranged booking clicks!

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.நயன்தார சினிமா உலகத்திற்கு வந்த பிறகு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கூறினர்.சில நாட்களிலேயே இருவருக்கிடையே மன கசுப்புக்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.அதனையடுத்து விஜயின் வில்லு படத்திற்கு பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த படத்தின் மூலம் நயன்தார மற்றும் பிரபு தேவா இடையே காதல் ஏற்பட்டது.ஆனால் பிரபுதேவா திருமணம் ஆனவர்.அவரது மனைவியுடன் விவாகரத்து பெறாததால்,இவர்களது காதல் விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதனையடுத்து நயன்தார எந்தவித படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.சிறிது காலம் பிறகு மீண்டும் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு பெரும் வெற்றியை அளித்தது.லேடி சூப்பர்ஸ்டாராக திரையுலகில் வலம் வருகிறார்.நானும் ரௌடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.சில தினங்களில் இருவரும் அதனை ஒப்புக்கொண்டனர்.இவர்களுக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்தது என்றும் பல தகவல்கள் வெளிவந்தது.அந்தவகையில் நயன்தார ஓர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில் இருவருக்கும் வீட்டில் நிச்சயம் முடிந்ததாக கூறினார்.இதேபோல திருமணமும் ரகசியமாக முடிந்திருக்கும் என்று அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தது.தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரையில் வெளியாகியுள்ளது.இந்த பட இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் பேட்டி ஒன்று எடுத்தனர்.அப்போது உங்களது திருமணம் எப்பொழுது என்று  கேள்வி கேட்டனர்.அதற்கு அவர் கூறியது,நானும் ரௌடி தான் படத்தையடுத்து ஓர் மாஸ் படம் நயன்தாராவை வைத்து கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.அதில் நயன்தாராவுக்கும் ஆர்வம் அதிகம்.

திருமணத்திற்கு முன்பு நாங்கள் இணைந்து ஓர் படம் கொடுத்த பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்தோம் என கூறினார்.அவர் கூறியதைப்போல தற்பொழுது படம் முடிந்துவிட்டது.படம் முடிந்த கையோடு ஷீரடி க்கு இரண்டு பெரும் சென்றனர்.தற்பொழுது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு அங்கு திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்தாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூன் 7 ஆம் தேதி அவர்களது திருமணம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.