இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

0
78
New change in scholarship only for these two categories! Sudden announcement made by the minister!
New change in scholarship only for these two categories! Sudden announcement made by the minister!

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொகை ,இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.இதனால் சுமார் 3826 பயனாளிகள் பயன் பெறுவார்கள்.

மேலும் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ,இயற்கை மரணத்திற்கு ரூ 30ஆயிரம் முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ 4 ஆயிரம் என உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.மேலும் அதேபோல் திருமண உதவித்தொகை ஆணுக்கு ரூ மூன்றாயிரம் ,பெண்ணிற்கு ரூ ஐந்தாயிரம் என உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் முதன் முறையாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ 1,000 உதவித்தொகை வழங்கப்படும்.என கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இணையாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

author avatar
Parthipan K