அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

0
133
Next trip is on 4th of July!! President's Important Announcement!!
Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது.

போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. இந்த  நிலையில் அந்த கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ள குடியரசுத் தலைவர் ஜூலை 4 ஆம் தேதி ஹைதராபாத்திற்கு வரவுள்ளதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீ பழங்குடி சமூகங்களின் நலன்களை பாதுகாப்பிற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்.

மேலும் அவர் வருகையையொட்டி மாநிலத் தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி  உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதனையடுத்து சாலை பணி, அவருக்கு தேவையான பாதுகாப்பு, மின்சாரம் போன்ற ஏற்பாடுகளை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா அரசு குடியரசுத் தலைவருக்கு தேவையான பாதுகாப்பிற்கு ராணுவ படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

author avatar
Jeevitha