நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!

0
161
#imvUdayanidhi refused actor Surya's request!! The interview is sad!!age_title

  நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!

தமிழக திரையுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஒரு ஹீரோ போன்று பல நன்மைகளை செய்து வருகின்றார்.

பொதுவாக சூர்யா படத்தில் தனக்கு என்று ஒரு கோட்பாட்டை வைத்து அதன்படி நடிப்பார். நடித்து பல புகழை சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  பொது வாழ்க்கையிலும் பல நன்மைகளை செய்து புகழ் பெற்றவர்.அதிலும் குறிப்பாக கல்விக்கென்று பல இளைஞர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.

இவர் செய்யும் உதவிகள் பல இருந்தாலும் ஆனால் அது எதுவும் வெளிய தெரியாதது போல் நடந்து கொள்வார். இப்படி யார் மனதையும் புண் படுத்தாமல்  எந்த வித தவறான கருத்தும் மக்களிடையே  செல்ல கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்க கூடியவர்.

இவருடைய படத்தில் இட ஒதிக்கீடு தொடர்பான ஒரு வசனம் வைகப்பட்டிருந்தது.அதில் சூர்யாவிற்கு எந்த வித உடன்பாடும் இல்லை அந்த படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் விருபத்திற்கு ஏற்ப இந்த வசனம் வைக்கப்பட்டது.

இதனால் சூர்யா உதயநிதி ஸ்டாலினிடம் இந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் நீக்கி விடுமாறு கூறியுள்ளார்.

அதாவது 2011 ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியாகும். இப்பொழுது அதன் உள் அர்த்தம் உணர்ந்து அதனை வைத்தற்காக மிகவும் வருந்துகிறேன் என்றார்.

author avatar
Parthipan K