நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

0
284

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது டெல்லியில் 2012 ஆம் ஆண்டு நெருப்பை என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட அவர் உடன் சென்ற நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் இதில் தொடர்புடைய ராம்சிங்,முகேஷ்,வினய் அக்சய் ,பவன் மற்றும் ஒரு சிறுவனையும் கைது செய்தனர் அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு குற்றவாளி ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் மற்ற நான்கு பேருக்கும் 2013ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை ஐகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி அளித்தனர்.

குற்றவாளிகளில் ஒருவர் இன் கருணை மனு சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது கருணை மனு நிராகரிக்கப்பட்ட 17 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது என்பது விதியாகும் எனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் தூக்கிலிட படலாம் என தகவல்கள் வெளியாகி நான்கு பேரும் 16ஆம் தேதி தூக்கிலிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற நால்வரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.


என்கவுண்டர் செய்த போலீசாருக்கு அம்மாநில மக்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது வலுத்தது எனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வதற்காக பீகாரில் இருந்து கயிறு ஆர்டர் கொடுக்கப்பட்டது. எனவே இம்மாதம் 16ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட வார்கள் என்ற தகவல் கசிந்தது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்சய்குமார் சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்த மனுவை 17ஆம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது இதனால் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleகிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!
Next articleமார்கழி மாதத்தில் இவ்வளவு நன்மைகளா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here