இந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா?

0
273

டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.கடைசியாக அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பட்டது இந்நிலையில்,
திகார் சிறையில் ஒரே தூக்கு மேடை உள்ள நிலையில், மேலும் சில தூக்கு மேடைகள் தயாராகி வருவதாக தகவல் வந்துள்ளன. இதோடு திகார் சிறையில், குழிகள் தோண்டும் பணிகள் நடப்பதாக கூறப்படுவதால், குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என கூறப்படுகிறது. 

ஒருவேளை நான்கு குற்றவாளிகளும் ஒரேநேரத்தில் தண்டிக்கப்பட்டால், அரேபிய தேசம் போல் நம் நாட்டிலும் நடக்கும் முதல் கூட்டுத் தூக்குத் தண்டனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Previous articleதேர்தலில் தோல்வி பெற வைத்த மக்களுக்கு நன்றி… சொல்லி போஸ்டர் ஓட்டிய நபர் !!!
Next articleதமிழகத்திற்கு கிடைத்த ஜாக்பாட்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here