எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.

0
161

எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகளிடையே இன்று உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது:
நித்தியானந்தா தான் நமது வழிகாட்டி,ஒரு தீவின் விலை 200 கோடி தான்.இப்படியே நாம ஆட்சிக்கே வர முடியாத சூழ்நிலையே நீடித்தால் நித்தியானந்தா போல நாமும் ஒரு பத்து பதினைந்து தீவு வாங்கி தூய தமிழ் மட்டுமே பேசும் மக்களை அங்கு குடிவைக்கலாம் என்ற திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் வருவது போல கொள்ளையடித்து வைத்துள்ள அரசியல்வாதிகளை ஆபீஸ் ரூமுக்குள் அழைத்துச் சென்று அவர்களிடத்தில் உள்ள பணத்தை எடுத்து தீவு வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் குறித்து தவறான முறையில் சமூக வலையதளங்களில் பதிய வேண்டாம் எனவும் தம்பிகளுக்கு அறிவுரை கூறினார்.ரஜினிகாந்த் கர்நாடக்த்திலோ மராட்டியத்திலோ சென்று கட்சி ஆராம்பித்தால் என்னை விட யாராலும் அவரை பாராட்ட முடியாது.ஏனெனில் அது அவரது மண் அந்த மண்ணை ஆள்வதற்க்கு அவருக்கு உரிமை உள்ளது.எங்கள் மண்ணை ஆளும் ஆசையை விட்டுவிடுங்கள் என்றும் எச்சரித்தார்.

மேலும் தனது திருமணத்திற்கு தமிழ்குமரன் மூலம் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அளித்தேன்.அதற்கு அவர் தனது கைப்பட எழுதி வாழ்த்து மடல் அனுப்பியதாகவும் அந்த கடிதம் இன்றுவரை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுபவர்களுக்கு சரியான தண்டனை தன்னுடைய ஆட்சியில் அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்.

சர்ச்சைக்கு பெயர் பெற்ற நித்தியானந்தா சாமியார் பெண்களுடன் தவறான தொடர்பை வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.அதேபோல சீமானின் மீதும் சமீபத்தில் விஜயலட்சுமி என்ற பெண்ணும் வீடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியிருந்தார்.இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சு சமூக வலையதளங்களில் நெட்டசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது

Previous articleஅரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு
Next articleபிரசாந்த் கிஷோர் மீது திருட்டு வழக்கு: திமுக அதிர்ச்சி