என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை தீரவில்லையா!! இதை செய்தால் தீர்வு கிடைத்து விடும்!!

0
37

என்ன செய்தாலும் தலை முடி பிரச்சனை தீரவில்லையா!! இதை செய்தால் தீர்வு கிடைத்து விடும்!!

முடி அதிகமாக கொட்டிக் கொண்டே இருக்கிறது, சிறிய வயதிலேயே வெள்ளை முடி தெரிகிறது, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் முடி வளரவே இல்லை, மேலும் தலைமுடி மிகவும் மெல்லியதாக காணப்படுகிறது, செம்மட்டையாக இருக்கிறது என்று பல பிரச்சினைகளை தீர்க்க ஏதேனும் ஒரு ஹேர் பேக்கை பயன்படுத்துவோம் அல்லது ஏதேனும் ஒரு எண்ணையை தயாரித்து அதை பயன்படுத்துவோம். ஆனால் இவ்வளவு செய்தும் முடி பிரச்சனை தீறாமல் இருப்பவர்கள் இந்த டிப்சை பயன்படுத்தினால் உடனடியாக தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

டிப்ஸ் 1:
நான்கு அல்லது ஐந்து கொத்து கருவேப்பிலை இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்த பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தயார் செய்த இந்த தண்ணீரை காட்டன் தொட்டோம் அல்லது ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேகரித்தோ முடியும் வேர்களில் நன்கு அப்ளை செய்து வர வேண்டும்.

இதை இரவு தூங்குவதற்கு முன்பு செய்துவிட்டு காலை எழுந்து தலைக்கு குளித்தும் வரலாம் அல்லது குளிக்காமலும் இருக்கலாம். இவ்வாறு இதை முடியும் வேர்களில் அப்ளை செய்து வர முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து முடி கொட்டுதல் பொடுகு பிரச்சனை நரைமுடி இருத்தல் என தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் இது சரியாக்கும்.

டிப்ஸ் 2
ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு அல்லது ஐந்து கொத்து கருவேப்பிலை இலைகளை சேர்த்து அதனுடன் சிறு துண்டு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் பாதி அளவு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இவ்வாறு செய்த இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் எழுந்து பல் துலக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு இந்த ஜூஸை குடிக்க வேண்டும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக குடித்து வரலாம் எந்த ஒரு விளைவுகளும் ஏற்படுத்தாது.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜூஸில் எலுமிச்சம் பழத்தை சேர்க்கக்கூடாது மேலும் தண்ணீருக்கு பதிலாக மோரை கலந்து குடித்து வரலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க முடியாதவர்கள் 11 மணி அளவில் குடித்து வரலாம்.

இவ்வாறு இதை தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு குடித்து வர முடியில் நல்ல ஒரு வித்தியாசம் நமக்கே தெரிய ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனை பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்காது அதே சமயத்தில் ஆழ்ந்த உறக்கம் நமக்கு உண்டாகும்.

கருவேப்பிலையில் அதிகப்படியான கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது. இதில் இருக்கக்கூடிய இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே முடி சம்பந்தமான பிரச்சனைகளை நமக்கு தீர்க்கும்.

 

author avatar
CineDesk