இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

Photo of author

By Rupa

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

Rupa

India: இந்தியாவின் தற்போது நான்கு வரி விகிதம் உள்ளது. அதில் பொதுமக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5%, ஆடம்பர பொருள்களுக்கு 12%, மேற்கொண்டு 18 மற்றும் 24% என்ற விகிதத்தில் கட்டுமான பொருட்கள், உயர்தர ஹோட்டல்களில் தங்கப்படும் அறை, பிளைட்டில் எக்னாமிக் வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான அமைப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்த 12 சதவீதத்திற்கு கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், முட்டை, மீன், டிரிங்கிங் வாட்டர், வாக்கி டாக்கி, காண்டாக்ட் லென்ஸ், டேட்ஸ், நட்ஸ், சாசேஜ், டூத் பேஸ்ட்,பவுடர், குழந்தைகளுக்கு உபயோகிக்கும் பீடிங் பாட்டில், குடைத், தொட்டில், சைக்கிள், அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தும் பலவகை பொருள்களுக்கும் இந்த வரி விகிதம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சமநிலைப்படுத்தும் வகையில் இனி 12 சதவீத வரி விதிப்பு தேவை இருக்காது என்ற முடிவை இதன் நிர்வாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். மாறாக பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவை பொருட்கள் அனைத்தையும் ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். அதேபோல மற்ற ஆடம்பர வரிசையில் வரும் அனைத்திற்கும் 18 சதவீதம் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சமநிலை வரி விகிதத்திற்கு பல மாநில அரசு அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரீதியாக வரும் 23ஆம் தேதி வருமான வரித்துறையின் முதன்மை தலைமை நிர்வாகிகளை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஆலோசனைக்கு பிறகு நான்கு அடுக்குகளாக இருக்கும் வரி விகிதம் மூன்று அடுக்குகளாக குறையும் என கூறுகின்றனர்.