TN Gov: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ரீதியான விவாதம் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீட்டில் குடும்ப பெண்களுக்கும் ஆயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் பெண்கள் பொருளாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இம்முறை உடல் ஊனமுற்றோருக்கு போட்டி இல்லாமையே ஊராட்சி பேரூராட்சிகளில் பதவி வழங்க உத்தரவிட்டுள்ளனர். இவையனைத்தும் அதிகார உயரத்தில் எடுத்துச் செல்ல தான் என தமிழக அரசு கூறியுள்ளது. கிராமத்தில் உள்ள கோவில்களின் பூசாரிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 12000 மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இது ரீதியாக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோவில் பூசாரிகள் பத்தாயிரம் பேருக்கு ரூ.12000 மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேற்கொண்டு கோவில் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலில் ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம். இது கருணை அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் இதன் தொகையை 2000 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.